search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி கிரிக்கெட் வாரிய பதவி: இரட்டை ஆதாயம் விதிமுறையால் காம்பீருக்கு சிக்கல்
    X

    டெல்லி கிரிக்கெட் வாரிய பதவி: இரட்டை ஆதாயம் விதிமுறையால் காம்பீருக்கு சிக்கல்

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் பெயருக்கு காம்பீர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது கிரிக்கெட் வீரராக இருக்கும் இவருக்கு இந்த பதவியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    இந்திய அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடிவர் கவுதம் காம்பீர். தற்போது சர்வதேச போட்டியில் காம்பீருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. என்றாலும், ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.

    தற்போது ரஞ்சி டிராபியின் 5-வது சுற்று லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காம்பீர் விளையாடி வருகிறார். நேற்று காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தின் ‘‘தான் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளேன். இதற்கான மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்தோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார்.



    லோதா பரிந்துரையின்படி ஒரு வீரராக இருப்பவர் நிர்வாகக்குழுவில் இடம்பெறக்கூடாது. அப்படி இருந்தால் இரட்டை ஆதாயம் பெறுதல் என்ற சிக்கலுக்கு உள்ளாக்கப்படுவர் என்பது விதி.

    நிர்வாகக் குழுவில் இடம்பிடித்திருந்தால் பயிற்சியாளர், தேர்வுக்குழு ஆகியவற்றை தேர்வு செய்வதில் தலையிட முடியும். ஒரு வீரர் இதில் தலையிட்டால் இரட்டை ஆதாயம் என்று அர்த்தம். இதனால் காம்பீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×