என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் கொடுத்த அற்புதத்தில் ஒன்று நண்பர்கள் : சச்சின் டெண்டுல்கர்
Byமாலை மலர்11 Nov 2017 6:53 AM GMT (Updated: 11 Nov 2017 6:53 AM GMT)
என் வாழ்க்கையில் கிடைத்த நண்பர்கள் கிரிக்கெட் கொடுத்த அற்புதமான செயல்களில் ஒன்று என சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
புதுடெல்லி:
சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராமில் நேற்று தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்தார். அதில் அவர் கிரிக்கெட் எனக்கு நிறைய நல்ல விஷயங்களை தந்துள்ளது. அவற்றில் மிக அற்புதமானது வாழ்நாளில் எனக்கு கிடைத்த நண்பர்களாகும். இவர்கள் உடன் இருக்கும் போது எப்போதும் சோர்ந்து போனதில்லை. அது விளையாடும் போதும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, எனக் குறிப்பிட்டிருந்தார்.
சச்சின் பதிவு செய்த புகைப்படம் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. ஏனென்றால் அதில் வினோத் காம்ப்ளி உடன் இருந்தது தான். வினோத் சச்சினின் சிறு வயது கிரிக்கெட் நண்பராவார். சில ஆண்டுகளுக்கு முன் சச்சினுடனான நட்பு முறிந்து விட்டதாக வினோத் தெரிவித்தார்.
தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர ஒன்றும் செய்ய வில்லை என்று 2009-ம் ஆண்டு காம்ப்ளி குற்றம் சாட்டினார். இது இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசலை ஏற்படுத்தியது. 2013-ல் தெண்டுல்கர் ஓய்வு பெறும் போட்டிக்கு கூட காம்ப்ளி அழைக்கப்படவில்லை. தனது உரையில் அவரது பெயரை கூட சச்சின் தெரிவிக்கவில்லை என வினோத் குற்றம் சாட்டினார்.
மீண்டும் அவர்கள் இணைந்தது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் கடந்த மாதம் புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்டது.
சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராமில் நேற்று தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்தார். அதில் அவர் கிரிக்கெட் எனக்கு நிறைய நல்ல விஷயங்களை தந்துள்ளது. அவற்றில் மிக அற்புதமானது வாழ்நாளில் எனக்கு கிடைத்த நண்பர்களாகும். இவர்கள் உடன் இருக்கும் போது எப்போதும் சோர்ந்து போனதில்லை. அது விளையாடும் போதும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, எனக் குறிப்பிட்டிருந்தார்.
சச்சின் பதிவு செய்த புகைப்படம் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. ஏனென்றால் அதில் வினோத் காம்ப்ளி உடன் இருந்தது தான். வினோத் சச்சினின் சிறு வயது கிரிக்கெட் நண்பராவார். சில ஆண்டுகளுக்கு முன் சச்சினுடனான நட்பு முறிந்து விட்டதாக வினோத் தெரிவித்தார்.
தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர ஒன்றும் செய்ய வில்லை என்று 2009-ம் ஆண்டு காம்ப்ளி குற்றம் சாட்டினார். இது இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசலை ஏற்படுத்தியது. 2013-ல் தெண்டுல்கர் ஓய்வு பெறும் போட்டிக்கு கூட காம்ப்ளி அழைக்கப்படவில்லை. தனது உரையில் அவரது பெயரை கூட சச்சின் தெரிவிக்கவில்லை என வினோத் குற்றம் சாட்டினார்.
மீண்டும் அவர்கள் இணைந்தது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் கடந்த மாதம் புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X