search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் கொடுத்த அற்புதத்தில் ஒன்று நண்பர்கள் : சச்சின் டெண்டுல்கர்
    X

    கிரிக்கெட் கொடுத்த அற்புதத்தில் ஒன்று நண்பர்கள் : சச்சின் டெண்டுல்கர்

    என் வாழ்க்கையில் கிடைத்த நண்பர்கள் கிரிக்கெட் கொடுத்த அற்புதமான செயல்களில் ஒன்று என சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராமில் நேற்று தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்தார். அதில் அவர் கிரிக்கெட் எனக்கு நிறைய நல்ல விஷயங்களை தந்துள்ளது. அவற்றில் மிக அற்புதமானது வாழ்நாளில் எனக்கு கிடைத்த நண்பர்களாகும். இவர்கள் உடன் இருக்கும் போது  எப்போதும் சோர்ந்து போனதில்லை. அது விளையாடும் போதும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, எனக் குறிப்பிட்டிருந்தார்.



    சச்சின் பதிவு செய்த புகைப்படம் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. ஏனென்றால் அதில் வினோத் காம்ப்ளி உடன் இருந்தது தான். வினோத் சச்சினின் சிறு வயது கிரிக்கெட் நண்பராவார். சில ஆண்டுகளுக்கு முன் சச்சினுடனான நட்பு முறிந்து விட்டதாக வினோத் தெரிவித்தார்.

    தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர ஒன்றும் செய்ய வில்லை என்று 2009-ம் ஆண்டு காம்ப்ளி குற்றம் சாட்டினார். இது இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசலை ஏற்படுத்தியது. 2013-ல் தெண்டுல்கர் ஓய்வு பெறும் போட்டிக்கு கூட காம்ப்ளி அழைக்கப்படவில்லை. தனது உரையில் அவரது பெயரை கூட சச்சின் தெரிவிக்கவில்லை என வினோத் குற்றம் சாட்டினார்.


    மீண்டும் அவர்கள் இணைந்தது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் கடந்த மாதம் புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்டது.
    Next Story
    ×