search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500-வது போட்டி: ஒரே இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் ரகானே
    X

    500-வது போட்டி: ஒரே இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் ரகானே

    இரண்டு 500-வது போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே பெற்றுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் முதன்யைான உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபி தொடரின் 2017-18 சீசனின் 5-வது கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கின. ஒரு போட்டியில் மும்பை - பரோடா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், 41 முறை ரஞ்சி டிராபியை கைப்பற்றிய மும்பைக்கு இது 500-வது ரஞ்சி டிராபி போட்டியாகும்.

    இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரகானே இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் 500-வது போட்டியில் பங்கேற்ற மும்பை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    இதற்கு முன் கடந்த ஆண்டு இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூரில் நடைபெற்றது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் ஆகும். இந்த போட்டியிலும் ரகானே இடம்பிடித்திருந்தார்.

    இதன்மூலம் இரண்டு முறை 500-வது போட்டியில் கலந்து கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையை ரகானே பெற்றுள்ளார்.
    Next Story
    ×