search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய மண்ணில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு: ஹெராத்
    X

    இந்திய மண்ணில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு: ஹெராத்

    இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய கனவு என்று இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதில் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் இடம்பிடித்துள்ளார். இலங்கை அணி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் இன்னும் வெற்றி பெறவே இல்லை. இந்திய மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் கனவு என்று ஹெரத் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஹெராத் கூறுகையில் ‘‘இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது கனவு. அப்படி வெற்றி பெற்றால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது அதிக அளவில் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    வெற்றி என்ற மனநிலை மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அதே உத்வேகத்துடன் விளையாடினால் இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற முடியும்’’ என்றார்.
    Next Story
    ×