என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறிமுக வீரர் மொகமது சிராஜ் அடுத்த போட்டியில் சிறப்பாக பந்து வீசுவார்: பும்ரா நம்பிக்கை
Byமாலை மலர்5 Nov 2017 10:54 AM GMT (Updated: 5 Nov 2017 10:54 AM GMT)
அறிமுக வீரர் மொகமது சிராஜ் கற்றுக்கொண்டு தன்னை சரி செய்து கொள்வதற்கு சற்று நேரம் தேவை என பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கொலின் முன்ரோவின் சதத்தால் 196 ரன்கள் குவித்தது. பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியாவால் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியின்போது இந்திய அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் அறிமுகமானார். இவர் நான்கு ஓவரில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆறுதலாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றினார்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நான்கு ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். முதல் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மொகமது கிராஜ் கற்றுக்கொண்டு தன்னை சரிசெய்து கொள்ள அவருக்கு கொஞ்சம் நேரம் தேவை என பும்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
மொகமது சிராஜ் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘மொகமது சிராஜ்-க்கு இது முதல் போட்டி. கடினமாக ஆடுகளத்தில் பந்து வீசுவது மிகவும் கடினம். அவர் அணிக்கு புதிதாக வந்துள்ளார். ஆகவே, பந்து வீச்சாளர்கள் தங்களை சரி செய்து கொள்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். அவர் அதை கற்றுக் கொள்வார்.
பவுலராக உங்களது பந்து வீச்சு அடி வாங்கும்போது, அதிலிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும். ஆகவே, இந்த அனுபவம் அடுத்த போட்டியில் அவரை சிறப்பாக பந்து வீச்சாளராக்கும்’’ என்றார்.
நேற்றைய போட்டியின்போது இந்திய அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் அறிமுகமானார். இவர் நான்கு ஓவரில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆறுதலாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றினார்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நான்கு ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். முதல் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மொகமது கிராஜ் கற்றுக்கொண்டு தன்னை சரிசெய்து கொள்ள அவருக்கு கொஞ்சம் நேரம் தேவை என பும்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
மொகமது சிராஜ் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘மொகமது சிராஜ்-க்கு இது முதல் போட்டி. கடினமாக ஆடுகளத்தில் பந்து வீசுவது மிகவும் கடினம். அவர் அணிக்கு புதிதாக வந்துள்ளார். ஆகவே, பந்து வீச்சாளர்கள் தங்களை சரி செய்து கொள்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். அவர் அதை கற்றுக் கொள்வார்.
பவுலராக உங்களது பந்து வீச்சு அடி வாங்கும்போது, அதிலிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும். ஆகவே, இந்த அனுபவம் அடுத்த போட்டியில் அவரை சிறப்பாக பந்து வீச்சாளராக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X