என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி: குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 55-38 என வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் சாம்பியன்
Byமாலை மலர்28 Oct 2017 3:48 PM GMT (Updated: 28 Oct 2017 4:44 PM GMT)
சென்னையில் நடைபெற்ற புரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 55-38 என வீழ்த்தி 3-வது முறையாக பாட்னா பைரட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை:
12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் கடந்த ஜூலை 28-ந்தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய வரவான தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
3 மாத காலம் நடைபெற்ற இந்த கபடி கொண்டாட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பலம் வாய்ந்த பாட்னா அணிக்கு குஜராத் அணி ஈடுகொடுத்து விளையாடியது. இதனால் தொடக்கத்தில் குஜராத் அணி முன்னிலைப் பெற்றது. ஒரு கட்டத்தில் பீகார் 6-14 என பின்தங்கியிருந்தது. பின்னர் பாட்னா அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் பாதி நேரத்தில் பீகார் அணி 21-18 முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்திலும் பீகார் அணி கையே ஓங்கியது. இறுதியில் பாட்னா அணி 55- 38 என மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் கடந்த ஜூலை 28-ந்தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய வரவான தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
3 மாத காலம் நடைபெற்ற இந்த கபடி கொண்டாட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பலம் வாய்ந்த பாட்னா அணிக்கு குஜராத் அணி ஈடுகொடுத்து விளையாடியது. இதனால் தொடக்கத்தில் குஜராத் அணி முன்னிலைப் பெற்றது. ஒரு கட்டத்தில் பீகார் 6-14 என பின்தங்கியிருந்தது. பின்னர் பாட்னா அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் பாதி நேரத்தில் பீகார் அணி 21-18 முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்திலும் பீகார் அணி கையே ஓங்கியது. இறுதியில் பாட்னா அணி 55- 38 என மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X