search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டென்மார்க் ஓபனை வென்ற கிதாம்பிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை
    X

    டென்மார்க் ஓபனை வென்ற கிதாம்பிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை

    டென்மார்க் ஓபனை வென்ற ஸ்ரீகாந்த் கிதாம்பிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் தெரிவித்துள்ளது.
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி கொரியாவின் லீ ஹியூன்-ஐ எதிர்கொண்டார். இதில் கிதாம்பி 21-10, 21-5 என எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் தலைவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் ‘‘டென்மார்க் ஓபனில் ஸ்ரீகாந்த் கிதாம்பி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதால் நாங்கள் பெருமையடைகிறோம்.



    பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு நமது நாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறார்கள் என்பதை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது’’ என்றார்.

    இந்த வருடம் ஸ்ரீகாந்த் கிதாம்பி கைப்பற்றிய 3-வது ஓபன் இதுவாகும். இதற்கு முன் இந்தோனேசிய ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றியுள்ளார்.
    Next Story
    ×