search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருது: ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் ரொனால்டோ
    X

    பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருது: ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் ரொனால்டோ

    போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார்.
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.



    இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மெஸ்சி 2-வது இடத்தையும், நெய்மர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.



    கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதை ஐந்தாவது முறையாக பெற்றுள்ளார். இதன் மூலம் ஐந்து முறை விருது வாங்கியிருந்த மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார்.



    ரியல் மாட்ரிட் அணியின் ஷினேடின் ஷிடேன் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை பெற்றார்.
    Next Story
    ×