search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் போட்டியில் 31-வது சதம்: பாண்டிங்கை முந்திய வீராட்கோலி
    X

    ஒருநாள் போட்டியில் 31-வது சதம்: பாண்டிங்கை முந்திய வீராட்கோலி

    வீராட்கோலி தனது 200-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அதிக செஞ்சூரி எடுத்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை முந்தினார்.
    வீராட்கோலி தனது 200-வது ஒருநாள் போட்டியில் ‘சதம்’ அடித்தார். ஆனால் அந்த சதம் பலன் இல்லாமல் போனது. அவர் 192 இன்னிங்சில் 31-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக செஞ்சூரி எடுத்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கிபாண்டிங்கை முந்தினார். அவர் 365 இன்னிங்சில் 30 சதம் அடித்து இருந்தார்.

    தெண்டுல்கர் 49 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அவரை தொட வீராட்கோலிக்கு இன்னும் 18 செஞ்சூரி தேவை.



    28 வயதான அவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இந்த ஆண்டில் இதுவரை 5 செஞ்சூரிகளை அடித்து உள்ளார். 2012-ம் ஆண்டிலும் இதே மாதிரி 5 சதம் எடுத்து இருந்தார். இலங்கை அணிக்கு எதிராக தான் அதிகபட்சமாக 8 செஞ்சூரி எடுத்துள்ளார். இந்திய மண்ணில் 13 சதத்தை பதிவு செய்தார்.
    Next Story
    ×