என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
U-17 உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
Byமாலை மலர்22 Oct 2017 7:40 PM GMT (Updated: 22 Oct 2017 7:40 PM GMT)
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் பிரேசில் 2-1 என ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
கொல்கத்தா:
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் பிரேசில் 2-1 என ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் மாலி அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில்,ஈரானை விழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது காலிறுதி போட்டியில் பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.
ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடின. ஆட்டத்தின் முதல் பாதியில் 21-வது நிமிடத்தில் ஜெர்மன் அணி கேப்டன் ஜான் பிடே ஆர்ப் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை கொடுத்தார்.
முதல் 70 நிமிடங்களில் ஜெர்மன் கைகளில் இருந்த ஆட்டத்தை அதன்பின் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது பிரேசில் அணி. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணியின் வீவர்சன் 71-வது நிமிடத்திலும், பவுலின்ஹோ 77-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இறுதியில், பிரேசில் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் பிரேசில் 2-1 என ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் மாலி அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில்,ஈரானை விழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது காலிறுதி போட்டியில் பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.
ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடின. ஆட்டத்தின் முதல் பாதியில் 21-வது நிமிடத்தில் ஜெர்மன் அணி கேப்டன் ஜான் பிடே ஆர்ப் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை கொடுத்தார்.
முதல் 70 நிமிடங்களில் ஜெர்மன் கைகளில் இருந்த ஆட்டத்தை அதன்பின் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது பிரேசில் அணி. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணியின் வீவர்சன் 71-வது நிமிடத்திலும், பவுலின்ஹோ 77-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இறுதியில், பிரேசில் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X