என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்
Byமாலை மலர்22 Oct 2017 5:18 PM GMT (Updated: 22 Oct 2017 5:18 PM GMT)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி கொரிய வீரரை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி கொரிய வீரரை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த மற்றும் கொரிய வீரர் லீ ஹ்யூன் ஆகியோர் மோதினர்.
இறுதி ஆட்டம் என்பதால் இரு நாட்டு வீரர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடினார்கள். ஆனால் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஆட்டத்தை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்.
ஆட்டத்தில் முதலில் இருந்தே ஸ்ரீகாந்த் அபாரமாக விளையாடினார். இதனால் 21-10 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதனால் இரண்டாவது செட்டில் கொரிய வீரர் கடும் போராட்டத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனாலும், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் இரண்டாவது செட்டை மிக நேர்த்தியாக கைப்பற்றினார். அவர் 21-5 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.
சுமார் 25 நிமிடங்கள் நடந்த இறுதி போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-10, 21-5 என்ற கணக்கில் கொரிய வீரரை எளிதில் வென்றார். இதன்மூலம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.
இந்த தொடரின் ஆரம்பம் முதலே வெகு சிறப்பாக விளையாடி, ஒவ்வொரு சுற்றுகளிலும் வெற்றி பெற்று இறுதியில் சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த மற்றும் கொரிய வீரர் லீ ஹ்யூன் ஆகியோர் மோதினர்.
இறுதி ஆட்டம் என்பதால் இரு நாட்டு வீரர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடினார்கள். ஆனால் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஆட்டத்தை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்.
ஆட்டத்தில் முதலில் இருந்தே ஸ்ரீகாந்த் அபாரமாக விளையாடினார். இதனால் 21-10 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதனால் இரண்டாவது செட்டில் கொரிய வீரர் கடும் போராட்டத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனாலும், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் இரண்டாவது செட்டை மிக நேர்த்தியாக கைப்பற்றினார். அவர் 21-5 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.
சுமார் 25 நிமிடங்கள் நடந்த இறுதி போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-10, 21-5 என்ற கணக்கில் கொரிய வீரரை எளிதில் வென்றார். இதன்மூலம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.
இந்த தொடரின் ஆரம்பம் முதலே வெகு சிறப்பாக விளையாடி, ஒவ்வொரு சுற்றுகளிலும் வெற்றி பெற்று இறுதியில் சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X