search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டென்மார்க் ஓபன்: ஸ்ரீகாந்த் கிதாம்பி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    டென்மார்க் ஓபன்: ஸ்ரீகாந்த் கிதாம்பி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங்காங் வீரர் வாங் விங் கி வின்சென்ட்-ஐ நேர்செட் கணக்கில் வீழ்த்தி 21-18, 21-17 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி  ஹாங்காங்கின் வாங் விங் கி வின்சென்ட்-ஐ எதிர்கொண்டார். தொடக்க முதலே ஸ்ரீகாந்த் கிதாம்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட்டை 21-18 எனக் கைப்பற்றினார்.

    2-வது செட்டிலும் ஸ்ரீகாந்த் கிதாம்பி சிறப்பாக விளையாடி 21-17 எனக் கைபற்றி, நேர்செட் கணக்கில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார.

    காலிறுதியில் நம்பர் ஒன் வீரராக டென்மார்க்கின் வீரர் விக்டர் அக்செலான்-ஐ 14-21, 22-20, 21-7 என வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×