என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி
Byமாலை மலர்20 Oct 2017 7:18 PM GMT (Updated: 20 Oct 2017 7:18 PM GMT)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யமாகுச்சிடம் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், ஜப்பான் வீராங்கனை யமாகுச்சும் மோதினர்.
மின்சாரம் தடைபட்டதால் ஆட்டம் சற்று பாதிக்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமாகுச் முதல் செட்டை 21-10 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். அதன்பின்னர் நடந்த இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி 21-13 என்ற புள்ளி கணக்கில் வென்றார். இறுதியில், யமாகுச் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் சாய்னா நேவாலை வென்றார். இவர்களது ஆட்டம் சுமார் அரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து சாய்னா நேவால் வெளியேறினார்.
இந்த தோல்வி குறித்து சாய்னா நேவால் கூறுகையில், ஜப்பானின் யமாகுச் சிறந்த வீரர். இன்றைய தினம் எனது ஆட்டம் மிக மோசமாக அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தடைபட்டதால் ஆட்டம் சற்று பாதிக்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமாகுச் முதல் செட்டை 21-10 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். அதன்பின்னர் நடந்த இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி 21-13 என்ற புள்ளி கணக்கில் வென்றார். இறுதியில், யமாகுச் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் சாய்னா நேவாலை வென்றார். இவர்களது ஆட்டம் சுமார் அரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து சாய்னா நேவால் வெளியேறினார்.
இந்த தோல்வி குறித்து சாய்னா நேவால் கூறுகையில், ஜப்பானின் யமாகுச் சிறந்த வீரர். இன்றைய தினம் எனது ஆட்டம் மிக மோசமாக அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X