என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: மலேசிய வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்19 Oct 2017 6:15 PM GMT (Updated: 19 Oct 2017 6:15 PM GMT)
டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் மலேசிய வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்கு முன்னேறினார்.
டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் மலேசிய வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்கு முன்னேறினார்.
டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் மற்றும் மலேசிய வீரர் சாங் வெய் ஆகியோருக்கு இடையே இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 21-17, 11-21, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் பிரணாய் வெற்றி பெற்றார். இந்த போட்டி ஒரு மணி நேரம் 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
முதல் சுற்றில் பிரணாய் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவர் மலேசிய வீரர் சாங் வெய்யை 21-17 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் மலேசிய வீரர் சாங் வெய் சுதாரித்துக் கொண்டார். இதனால் அவர் பிரணாயை 11-21 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அனல் பறந்தது. இரண்டு வீரர்களும் தங்களது பலத்தை காட்டினர். இறுதியில், மலேசிய வீரர் சாங் வெய்யை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவின் பிரணாய் வெற்றி பெற்றார். கடைசியாக, 21-17, 11-21, 21-19 என்ற செட்களில் இந்திய வீரர் பிரணாய் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வயதிலும் மலேசிய வீரர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரால் எங்கு வேண்டுமானாலும் விளையாட முடியும். அடுத்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதே எனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் பிரணாய் மலேசிய வீரர் சாய் வெய்யை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் மற்றும் மலேசிய வீரர் சாங் வெய் ஆகியோருக்கு இடையே இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 21-17, 11-21, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் பிரணாய் வெற்றி பெற்றார். இந்த போட்டி ஒரு மணி நேரம் 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
முதல் சுற்றில் பிரணாய் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவர் மலேசிய வீரர் சாங் வெய்யை 21-17 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் மலேசிய வீரர் சாங் வெய் சுதாரித்துக் கொண்டார். இதனால் அவர் பிரணாயை 11-21 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அனல் பறந்தது. இரண்டு வீரர்களும் தங்களது பலத்தை காட்டினர். இறுதியில், மலேசிய வீரர் சாங் வெய்யை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவின் பிரணாய் வெற்றி பெற்றார். கடைசியாக, 21-17, 11-21, 21-19 என்ற செட்களில் இந்திய வீரர் பிரணாய் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வயதிலும் மலேசிய வீரர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரால் எங்கு வேண்டுமானாலும் விளையாட முடியும். அடுத்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதே எனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் பிரணாய் மலேசிய வீரர் சாய் வெய்யை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X