search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை நீக்கம் ரத்து: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை நீக்கம் ரத்து: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

    பிசிசிஐயின் மேல்முறையீடு மனு வழக்கில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடை நீக்கத்தை ரத்து செய்தது கேரள உயர்நீதிமன்றம்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது இவர் மேட்ச் பிச்சில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி கோர்ட் ஸ்ரீசாந்தை கைது செய்தது. இதனால் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது.

    பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஸ்ரீசாந்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அவரை கோர்ட் விடுதலை செய்தது.

    என்றாலும் பிசிசிஐ ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



    ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பெஞ்ச்-க்கு வந்தது. அப்போது பிசிசிஐ-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் அயுட்கால தடையை நீக்கிய உத்தரவை திரும்ப பெற்றது.

    இதனால் ஸ்ரீசந்த் மீதான ஆயுட்கால தடை நீடிக்கிறது.
    Next Story
    ×