என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் காரணம்: ரோகித் சர்மா
Byமாலை மலர்17 Oct 2017 12:48 PM GMT (Updated: 17 Oct 2017 12:48 PM GMT)
இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் காரணம் என தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரைத் தவிர மற்ற எந்த தொடர்களையும் இழக்கவில்லை இந்நிலையில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கான ரகசியத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் தொடர் வெற்றி குறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இந்திய அணி சமீப காலமாக சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பதற்கு, ஒவ்வொரு வீரர்களும் காரணம். அனைவரும் இதன் பெருமை சேரும்.
நாட்டிற்கோ அல்லது சொந்த ஊருக்காகவோ நீங்கள் விளையாடும்போது, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அது எளிதான பணி அல்ல. நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 6 தொடர்களை வென்றுள்ளோம். இதற்கு அணியின் ஒற்றுமையே காரணம்.
அணி வெற்றி பெற வேண்டும் என்ற விரும்பினால் ஒன்றிரண்டு வீரர்கள் மட்டும் சிறப்பாக விளையாடினால் போதாது. அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதை நோக்கிதான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். தற்போது அணி சிறந்தது என்று நினைக்கிறேன்’’ என்றார்.
இந்திய அணியின் தொடர் வெற்றி குறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இந்திய அணி சமீப காலமாக சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பதற்கு, ஒவ்வொரு வீரர்களும் காரணம். அனைவரும் இதன் பெருமை சேரும்.
நாட்டிற்கோ அல்லது சொந்த ஊருக்காகவோ நீங்கள் விளையாடும்போது, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அது எளிதான பணி அல்ல. நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 6 தொடர்களை வென்றுள்ளோம். இதற்கு அணியின் ஒற்றுமையே காரணம்.
அணி வெற்றி பெற வேண்டும் என்ற விரும்பினால் ஒன்றிரண்டு வீரர்கள் மட்டும் சிறப்பாக விளையாடினால் போதாது. அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதை நோக்கிதான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். தற்போது அணி சிறந்தது என்று நினைக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X