என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
U-17 உலகக்கோப்பை கால்பந்து: நாக்-அவுட் போட்டிகளில் ஜெர்மனி, அமெரிக்கா அணிகள் வெற்றி
Byமாலை மலர்16 Oct 2017 5:39 PM GMT (Updated: 16 Oct 2017 5:39 PM GMT)
17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிகள் வெற்றி பெற்றன.
புதுடெல்லி:
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று (16-ம் தேதி) தொடங்கியது.
டெல்லியில் 5 மணிக்கு தொடங்கிய நாக்-அவுட் போட்டியில் ஜெர்மனி, கொலம்பியா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஜெர்மனி அணி அதிரடியாக விளையாடியது. போட்டி தொடங்கிய 7-வது நிமிடம் ஜெர்மனியின் ஜன்-ஃபிடே அர்ப் கோல் அடித்தார். அடுத்து 39-வது நிமிடத்தில் ஜெர்மனியின் யான் பிசெக் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்ட முடிவில் ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜான் யெபோவா கோல் அடித்தார். அடுத்து 65-வது நிமிடம் ஜெர்மனியின் ஜன்-ஃபிடே அர்ப் தனது இரண்டாவது கோல் அடித்தார். கொலம்பியா அணியினர் அனைத்து கோல் போடும் முயற்சிகளையும் ஜெர்மனி வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
டெல்லியில் 8 மணிக்கு தொடங்கிய இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் அமெரிக்கா - பராகுவே அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அமெரிக்கா அணியின் டிம் வே 19-வது, 53-வது மற்றும் 77-வது நிமிடங்களில் மூன்று கோல்கள் அடித்தார். இதுதவிர கார்லிடன் 63-வது நிமிடத்திலும், சார்ஜண்ட் 74-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். அமெரிக்கா அணியும் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
நாளை கவுஹாத்தியில் நடைபெறும் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் மாலி - ஈராக், பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று (16-ம் தேதி) தொடங்கியது.
டெல்லியில் 5 மணிக்கு தொடங்கிய நாக்-அவுட் போட்டியில் ஜெர்மனி, கொலம்பியா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஜெர்மனி அணி அதிரடியாக விளையாடியது. போட்டி தொடங்கிய 7-வது நிமிடம் ஜெர்மனியின் ஜன்-ஃபிடே அர்ப் கோல் அடித்தார். அடுத்து 39-வது நிமிடத்தில் ஜெர்மனியின் யான் பிசெக் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்ட முடிவில் ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜான் யெபோவா கோல் அடித்தார். அடுத்து 65-வது நிமிடம் ஜெர்மனியின் ஜன்-ஃபிடே அர்ப் தனது இரண்டாவது கோல் அடித்தார். கொலம்பியா அணியினர் அனைத்து கோல் போடும் முயற்சிகளையும் ஜெர்மனி வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
டெல்லியில் 8 மணிக்கு தொடங்கிய இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் அமெரிக்கா - பராகுவே அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அமெரிக்கா அணியின் டிம் வே 19-வது, 53-வது மற்றும் 77-வது நிமிடங்களில் மூன்று கோல்கள் அடித்தார். இதுதவிர கார்லிடன் 63-வது நிமிடத்திலும், சார்ஜண்ட் 74-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். அமெரிக்கா அணியும் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
நாளை கவுஹாத்தியில் நடைபெறும் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் மாலி - ஈராக், பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X