என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி: லீக் சுற்று போட்டிகளில் பெங்களூரு புல்ஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி
Byமாலை மலர்15 Oct 2017 5:40 PM GMT (Updated: 15 Oct 2017 5:40 PM GMT)
புனே நகரில் நடைபெற்ற புரோ கபடி லீக் சுற்று போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் வெற்றி பெற்றன.
புனே:
5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். புனே சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 34-31 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், புனேரி அணி கேப்டன் தீபக் ஹூடா அதிகபட்சமாக 10 தொடுபுள்ளிகளும் எடுத்தார்.
முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 38-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ரோஹித் குமார் அதிகபட்சமாக 12 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் அணி 73 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தபாங் டெல்லி அணி 38 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் உ.பி. யோத்தா அணி 60 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், பெங்களூரு புல்ஸ் அணி 49 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
நாளை ஓய்வு தினம். நாளை மறுநாள் நடைபெறும் லீக் போட்டிகளில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். புனே சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 34-31 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், புனேரி அணி கேப்டன் தீபக் ஹூடா அதிகபட்சமாக 10 தொடுபுள்ளிகளும் எடுத்தார்.
முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 38-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ரோஹித் குமார் அதிகபட்சமாக 12 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் அணி 73 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தபாங் டெல்லி அணி 38 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் உ.பி. யோத்தா அணி 60 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், பெங்களூரு புல்ஸ் அணி 49 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
நாளை ஓய்வு தினம். நாளை மறுநாள் நடைபெறும் லீக் போட்டிகளில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X