search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து ‘ஏ’ அணியை 3-0 என வீழ்த்தியது இந்தியா ‘ஏ’
    X

    ஒருநாள் கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து ‘ஏ’ அணியை 3-0 என வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

    நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என இந்தியா ‘ஏ’ அணி கைப்பற்றியது.
    இந்தியா ‘ஏ’ - நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 2-0 எனத் தொடரைக் கைப்பற்றிய நிலையில், இன்று ஐந்தாவது ஆட்டம் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ‘ஏ’ அணி 44.2 ஓவரில் 173 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி சேஸிங்கை தொடங்கியது. நியூசிலாந்தின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ‘ஏ’ அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தது.

    90 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா ‘ஏ’ அதன்பின் 32.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கரண் சர்மா 38 ரன்களும், சர்துல் தாகூர் 40 ரன்களும் எடுத்து இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக  இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்தியா ‘ஏ’ அணி கைப்பற்றியது. முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 2-வது போட்டி ‘டை’ யில் முடிந்தது.

    கடைசி மூன்று போட்டிகளிலும் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×