என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்ப்பு
Byமாலை மலர்14 Oct 2017 12:56 PM GMT (Updated: 14 Oct 2017 12:56 PM GMT)
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஷ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 22-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சமீப காலமாக இந்திய அணி வெகு சிறப்பாக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் விளையாடி அபார வெற்றிகளை பெற்று வருகிறோம்.
இதற்கிடையே, நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜடேஜா, அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஜிங்கியா ரகானே, மனீஷ்பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்திப் யாதவ், சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X