என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆஸ்திரேலிய வீரர்கள் பஸ் மீது கல்வீச்சு: 3-வது 20 ஓவர் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு
ஐதராபாத்:
இந்தியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.
இரு அணிகளும் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது, போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் நடக்கிறது.
கவுகாத்தியில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற பிறகு அந்த அணி வீரர்கள் பஸ்சில் ஓட்டலுக்கு திரும்பிய போது கற்கள் வீசப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று நடக்கும் 3-வது போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. துணை ராணுவப்படை உள்பட கூடுதலாக 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மைதானத்தை சுற்றி 56 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.
ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், ஹெல்மெட், லேப்-டாப், கேமரா ஆகியவை எடுத்து செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. வீரர்கள் செல்லும் பஸ்களுடன் சிறப்பு போலீஸ் பிரிவு படையினர் உடன் செல்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்