என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி ‘லீக்’ போட்டி: தமிழ் தலைவாஸ் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா?
Byமாலை மலர்10 Oct 2017 6:19 AM GMT (Updated: 10 Oct 2017 6:20 AM GMT)
புரோ கபடி ‘லீக்’கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பைக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்:
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 11-வது கட்ட ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் அஜய் தாக்கூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.
‘பி’ பிரிவில் அந்த அணி 19 ஆட்டத்தில் 4 வெற்றி, 13 தோல்வி, 2 ‘டை’யுடன் 35 புள்ளியுடன் ‘பி’ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் 20-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் மும்பை அணியை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது. அந்த அணி சென்னையில் நடந்த 6 ஆட்டத்தில் தொடர்ச்சியாக தோற்றது. இதனால் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பைக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் வென்றால் ரசிகர்கள் ஆறுதல் அடைவார்கள்.
மும்பை அணி 20 ஆட்டத்தில் 10 வெற்றி, 10 தோல்வியுடன் 63 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் கிட்டத்தட்ட வாய்ப்பை இழந்துவிட்டது. தமிழ் தலைவாசை சென்னையில் நடந்த ஆட்டத்தில் வீழ்த்தி இருந்ததால் மும்பை அணி 11-வது வெற்றியை பெற இயலும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- தபாங் டெல்லி மோதுகின்றன. ஜெய்ப்பூர் அணி 9-வது வெற்றிக்காகவும், டெல்லி அணி 5-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 11-வது கட்ட ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் அஜய் தாக்கூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.
‘பி’ பிரிவில் அந்த அணி 19 ஆட்டத்தில் 4 வெற்றி, 13 தோல்வி, 2 ‘டை’யுடன் 35 புள்ளியுடன் ‘பி’ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் 20-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் மும்பை அணியை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது. அந்த அணி சென்னையில் நடந்த 6 ஆட்டத்தில் தொடர்ச்சியாக தோற்றது. இதனால் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பைக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் வென்றால் ரசிகர்கள் ஆறுதல் அடைவார்கள்.
மும்பை அணி 20 ஆட்டத்தில் 10 வெற்றி, 10 தோல்வியுடன் 63 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் கிட்டத்தட்ட வாய்ப்பை இழந்துவிட்டது. தமிழ் தலைவாசை சென்னையில் நடந்த ஆட்டத்தில் வீழ்த்தி இருந்ததால் மும்பை அணி 11-வது வெற்றியை பெற இயலும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- தபாங் டெல்லி மோதுகின்றன. ஜெய்ப்பூர் அணி 9-வது வெற்றிக்காகவும், டெல்லி அணி 5-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X