search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி ‘லீக்’ போட்டி: தமிழ் தலைவாஸ் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா?
    X

    புரோ கபடி ‘லீக்’ போட்டி: தமிழ் தலைவாஸ் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா?

    புரோ கபடி ‘லீக்’கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பைக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஜெய்ப்பூர்:

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 11-வது கட்ட ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் அஜய் தாக்கூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.

    ‘பி’ பிரிவில் அந்த அணி 19 ஆட்டத்தில் 4 வெற்றி, 13 தோல்வி, 2 ‘டை’யுடன் 35 புள்ளியுடன் ‘பி’ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.

    தமிழ் தலைவாஸ் 20-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் மும்பை அணியை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது. அந்த அணி சென்னையில் நடந்த 6 ஆட்டத்தில் தொடர்ச்சியாக தோற்றது. இதனால் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பைக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் வென்றால் ரசிகர்கள் ஆறுதல் அடைவார்கள்.

    மும்பை அணி 20 ஆட்டத்தில் 10 வெற்றி, 10 தோல்வியுடன் 63 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் கிட்டத்தட்ட வாய்ப்பை இழந்துவிட்டது. தமிழ் தலைவாசை சென்னையில் நடந்த ஆட்டத்தில் வீழ்த்தி இருந்ததால் மும்பை அணி 11-வது வெற்றியை பெற இயலும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- தபாங் டெல்லி மோதுகின்றன. ஜெய்ப்பூர் அணி 9-வது வெற்றிக்காகவும், டெல்லி அணி 5-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.
    Next Story
    ×