search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 18.4 ஓவரில் 118/8; மழையால் ஆட்டம் நிறுத்தம்
    X

    ராஞ்சி டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 18.4 ஓவரில் 118/8; மழையால் ஆட்டம் நிறுத்தம்

    ராஞ்சியில் நடைபெற்று வரும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு தவான் மற்றும் சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    இந்திய அணியில், 1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. மணீஷ் பாண்டே, 5. டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ஹர்திக் பாண்டியா, 8. புவனேஷ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. சாஹல், 11. பும்ப்ரா ஆகியோர் இடம்பிடித்தனர்.

    ஆஸ்திரேலிய அணியில், 1. வார்னர், 2. ஆரோன் பிஞ்ச், 3. மேக்ஸ்வெல், 4. ட்ராவிஸ் ஹெட், 5. ஹென்ரிக்ஸ், 6. டான் கிறிஸ்டியன், 7. டிம் பெய்ன், 8. நாதன் கவுல்டர்-நைல், 9. அந்த்ரே டை, 10. ஆடம் சம்பா, 11. ஜேசன் பெரேன்டர்ஃஃப் ஆகியோர் இடம்பிடித்தனர்.

    வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புனேஸ்வர் குமார் வீசினார். 3-வது மற்றும் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வார்னர், 5-வது பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார்.

    அடுத்து பிஞ்ச் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். 3-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் பிஞ்ச் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். 6-வது ஓவரை பாண்டியா வீசினார். இந்த ஓவரின் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரியும், பிஞ்ச் ஒரு பவுண்டரியும் அடித்தனர்.


    வார்னர் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் புவனேஸ்வர் குமார்

    7-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த மேக்ஸ்வெல், அடுத்த பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மேக்ஸ்வெல்லை இந்த அவுட் உடன் நான்காவது முறையாக சாஹல் வெளியேற்றியுள்ளார்.

    மறுமுனையில் விளையாடிய ஆரோன் பிஞ்ச் குல்தீப் யாதவின் 10-வது ஓவரின் 5-வது பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார். பிஞ்ச் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் சேர்த்தார்.




    பிஞ்ச் ஆட்டமிழந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே மந்தமானது. ஹென்ரிக்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்திலும், ட்ராவிஸ் ஹெட் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்திலும் ஆட்டம் இழந்தனர். 15-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் மூன்று முறை பெய்ன் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    17-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் பெய்ன் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் புவனேஸ்வர் குமார் இந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பெய்ன் ஸ்டம்பை பறிகொடுத்தார். 4-வது பந்தில் கவுல்டர்-நைல் போல்டானார்.


    மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்திய சாஹல்

    19-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தில் கிறிஸ்டியன் ரன்அவுட் ஆனார். இந்தியா 18.4 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.

    இத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளபட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×