search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்லப்பிராணியுடன் பொழுதுபோக்கிய டோனி - வைரலாகும் வீடியோ
    X

    செல்லப்பிராணியுடன் பொழுதுபோக்கிய டோனி - வைரலாகும் வீடியோ

    இந்திய கிரிக்கெட் வீரர் டோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் வளர்த்துவரும் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடும் வீடியோவை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    ராஞ்சி:  

    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில், இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளன. 

    இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி வரும் 7-ம் தேதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் துவங்குகிறது. இதில் விளையாடுவதற்காக இரு அணிகளும் ராஞ்சிக்கு வந்துள்ளன. அங்கு தீவிர வலைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று டோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவிட்டார். அப்போது தனது செல்லபிராணியான 'சாம்' என்ற நாயுடன் டோனி விளையாடும் வீடியோவை அவரது மனைவி ஷாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    அதில் டோனியின் அசைவுகளுக்கு ஏற்ப அவரது செல்லபிராணி அங்கும் இங்கும் துள்ளிக்குதித்து விளையாடுகிறது. இந்த வீடியோ சென்னை சூப்பர் கிங்சின் பேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இந்த விடீயோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
    Next Story
    ×