என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யுஸ்வேந்திர சாஹல், குல்தீப்பிடம் ரோகித் சர்மா எடுத்த ஜாலி பேட்டி
Byமாலை மலர்5 Oct 2017 4:07 AM GMT (Updated: 5 Oct 2017 4:07 AM GMT)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒருநாள் நிருபர் அவதாரம் எடுத்து இளம் சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரை ருசிகர பேட்டி எடுத்து கலாய்த்து இருக்கிறார்.
ராஞ்சி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை எளிதாக வென்ற இந்திய கிரிக்கெட் அணி அந்த வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒருநாள் நிருபர் அவதாரம் எடுத்து இளம் சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரை ருசிகர பேட்டி எடுத்து கலாய்த்து இருக்கிறார். இந்த பேட்டியின் வீடியோ பதிவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
ரோகித் சர்மா: உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். குறிப்பாக பெண் ரசிகர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
யுஸ்வேந்திர சஹால்: நான் நிறைய பேசக்கூடியவன். இருப்பினும் ஒரு பெண் என் முன்னால் வந்து நின்றால் அமைதியாகி விடுவேன். என்னுடன் பல ஆண்டுகள் பழகியவர்களை பார்த்தால் பிரச்சினை இல்லை. முதல்முறையாக பார்க்கும் பெண்ணாக இருந்தால் பேசமாட்டேன். சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நழுவிவிடுவேன்.
குல்தீப் யாதவ்: என்னை பொறுத்தமட்டில் இந்த விஷயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை. நான் அதிகம் பேசக்கூடியவன் கிடையாது. எனக்கு தெரிந்தவர்களாக இருந்தால் சிறிது நேரம் பேசுவேன். பெண்களுடன் நான் அதிகம் பழகியவன் கிடையாது. கூச்ச சுபாவம் கொண்டவன். எனது பள்ளி பருவத்தில் கூட நான் கிரிக்கெட் பயிற்சியில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ரசிகைகளை சரியாக கையாள முடியும். அதனை கடினமானதாக நான் நினைக்கவில்லை.
ரோகித் சர்மா: ஆடுகளத்திற்கு வெளியே உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னன்ன?
யுஸ்வேந்திர சாஹல்: வெளியில் சென்று ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டும் என்று விரும்புவேன். அறைக்குள் அடைந்து கிடப்பதை விரும்பமாட்டேன். நான் இரவு விருந்துகளுக்கு செல்லாவிட்டாலும், வெளியில் சென்று இரவு உணவு சாப்பிடுவதை விரும்புவேன். சத்தமாக இசையை கேட்டு ரசிப்பது எனக்கு பிடித்தமான விஷயமாகும்.
குல்தீப் யாதவ்: அறைக்குள் இருப்பதையே அதிகம் விரும்புவேன். எனக்கு கால்பந்து போட்டி மிகவும் பிடிக்கும். நான் கால்பந்து நன்றாக விளையாடாவிட்டாலும், அந்த விளையாட்டை அதிகம் பார்க்க விரும்புவேன். எப்பொழுதும் இயல்பாக இருப்பது எனக்கு பிடித்தமானதாகும்.
ரோகித் சர்மா: உங்களுக்கு பிடித்தமான நடிகை யார்?
யுஸ்வேந்திர சாஹல்: இந்தி நடிகை கத்ரினா கைப்
குல்தீப் யாதவ்: இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
ரோகித் சர்மா: ஜாலியாக நீங்கள் செல்ல விரும்பும் இடம்?
யுஸ்வேந்திர சாஹல்: எனது தோழி அல்லது வருங்கால மனைவியுடன் போரா, போரா தீவுக்கு (பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இடம்) செல்ல விரும்புகிறேன்.
குல்தீப் யாதவ்: என்னை கவர்ந்த இடம் பாரீஸ். எனது வருங்கால மனைவியுடன் அங்கு செல்ல முடியும் என்று நம்புகிறேன்.
ரோகித் சர்மா: கிரிக்கெட்டை தவிர்த்து உங்களுக்கு பிடித்த வீரர்?
யுஸ்வேந்திர சாஹல்: தொழில்முறை மல்யுத்த வீரர் வெய்ன் ஜான்சன் (அமெரிக்கா).
குல்தீப் யாதவ்: பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை சந்தித்து உரையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை எளிதாக வென்ற இந்திய கிரிக்கெட் அணி அந்த வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒருநாள் நிருபர் அவதாரம் எடுத்து இளம் சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரை ருசிகர பேட்டி எடுத்து கலாய்த்து இருக்கிறார். இந்த பேட்டியின் வீடியோ பதிவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
ரோகித் சர்மா: உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். குறிப்பாக பெண் ரசிகர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
யுஸ்வேந்திர சஹால்: நான் நிறைய பேசக்கூடியவன். இருப்பினும் ஒரு பெண் என் முன்னால் வந்து நின்றால் அமைதியாகி விடுவேன். என்னுடன் பல ஆண்டுகள் பழகியவர்களை பார்த்தால் பிரச்சினை இல்லை. முதல்முறையாக பார்க்கும் பெண்ணாக இருந்தால் பேசமாட்டேன். சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நழுவிவிடுவேன்.
குல்தீப் யாதவ்: என்னை பொறுத்தமட்டில் இந்த விஷயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை. நான் அதிகம் பேசக்கூடியவன் கிடையாது. எனக்கு தெரிந்தவர்களாக இருந்தால் சிறிது நேரம் பேசுவேன். பெண்களுடன் நான் அதிகம் பழகியவன் கிடையாது. கூச்ச சுபாவம் கொண்டவன். எனது பள்ளி பருவத்தில் கூட நான் கிரிக்கெட் பயிற்சியில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ரசிகைகளை சரியாக கையாள முடியும். அதனை கடினமானதாக நான் நினைக்கவில்லை.
ரோகித் சர்மா: ஆடுகளத்திற்கு வெளியே உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னன்ன?
யுஸ்வேந்திர சாஹல்: வெளியில் சென்று ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டும் என்று விரும்புவேன். அறைக்குள் அடைந்து கிடப்பதை விரும்பமாட்டேன். நான் இரவு விருந்துகளுக்கு செல்லாவிட்டாலும், வெளியில் சென்று இரவு உணவு சாப்பிடுவதை விரும்புவேன். சத்தமாக இசையை கேட்டு ரசிப்பது எனக்கு பிடித்தமான விஷயமாகும்.
குல்தீப் யாதவ்: அறைக்குள் இருப்பதையே அதிகம் விரும்புவேன். எனக்கு கால்பந்து போட்டி மிகவும் பிடிக்கும். நான் கால்பந்து நன்றாக விளையாடாவிட்டாலும், அந்த விளையாட்டை அதிகம் பார்க்க விரும்புவேன். எப்பொழுதும் இயல்பாக இருப்பது எனக்கு பிடித்தமானதாகும்.
ரோகித் சர்மா: உங்களுக்கு பிடித்தமான நடிகை யார்?
யுஸ்வேந்திர சாஹல்: இந்தி நடிகை கத்ரினா கைப்
குல்தீப் யாதவ்: இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
ரோகித் சர்மா: ஜாலியாக நீங்கள் செல்ல விரும்பும் இடம்?
யுஸ்வேந்திர சாஹல்: எனது தோழி அல்லது வருங்கால மனைவியுடன் போரா, போரா தீவுக்கு (பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இடம்) செல்ல விரும்புகிறேன்.
குல்தீப் யாதவ்: என்னை கவர்ந்த இடம் பாரீஸ். எனது வருங்கால மனைவியுடன் அங்கு செல்ல முடியும் என்று நம்புகிறேன்.
ரோகித் சர்மா: கிரிக்கெட்டை தவிர்த்து உங்களுக்கு பிடித்த வீரர்?
யுஸ்வேந்திர சாஹல்: தொழில்முறை மல்யுத்த வீரர் வெய்ன் ஜான்சன் (அமெரிக்கா).
குல்தீப் யாதவ்: பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை சந்தித்து உரையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X