search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி: டெல்லிக்கு எதிரான போட்டியில் உ.பி. அணி அதிரடி வெற்றி
    X

    புரோ கபடி: டெல்லிக்கு எதிரான போட்டியில் உ.பி. அணி அதிரடி வெற்றி

    புரோ கபடி லீக் சுற்று போட்டியில் டெல்லி அணியை 45-16 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோத்தா அணி அதிரடியாக வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி: 

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐதராபாத், நாக்பூர், ஆமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி ஆகிய இடங்களில் இந்தப்போட்டி நடைபெற்று  முடிந்தன.

    நேற்று (27ம் தேதி) நடைபெற்ற ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பரிவில் உள்ள உ.பி. யோத்தா அணியும், ‘ஏ’ பிரிவில் உள்ள தபாங் டெல்லி அணியும் மோதின. இப்போட்டியில், உ.பி. அணி 45-16 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வென்றது. உ.பி. அணியின் நிதின் தோமர் அதிகபட்சமாக 14 தொடுபுள்ளிகள் எடுத்தார்.

    முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41-34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி கேப்டன் ராகுல் சவுத்திரியும், ஜெய்ப்பூர் அணியின் பவன்குமாரும் தலா  17 தொடுபுள்ளிகள் எடுத்தனர். 

    இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் ஜெய்ப்பூர் அணி 38 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், தபாங் டெல்லி அணி 31 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் உ.பி. அணி 48 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 38 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் நீடிக்கின்றன.
     
    இன்று (28ம் தேதி) நடைபெறும் லீக் போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் - யூ மும்பா, தபாங் டெல்லி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.


    Next Story
    ×