என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி மும்பை வந்தது
Byமாலை மலர்27 Sep 2017 4:30 AM GMT (Updated: 27 Sep 2017 4:31 AM GMT)
ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி மும்பை வந்து சேர்ந்தது. இந்த அணி நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
மும்பை:
17-வது ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான) உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் அரங்கேறுகிறது. இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் அணிகளில் சிறப்பான 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும். தொடக்க நாளான 6-ந் தேதி டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா-கானா (மாலை 5 மணி), இந்தியா-அமெரிக்கா (இரவு 8 மணி) அணியும், மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து-துருக்கி (மாலை 5 மணி), பராகுவே-மாலி (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி நேற்று காலை மும்பை வந்து சேர்ந்தது. அந்தேரியில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. முதல் நாளில் மும்பையில் நடைபெறும் 2 லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 20 ஆயிரம் விற்பனை ஆகி இருக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 10 நாட்கள் இருப்பதால் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மொத்தம் 45,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும்.
17-வது ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான) உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் அரங்கேறுகிறது. இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் அணிகளில் சிறப்பான 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும். தொடக்க நாளான 6-ந் தேதி டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா-கானா (மாலை 5 மணி), இந்தியா-அமெரிக்கா (இரவு 8 மணி) அணியும், மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து-துருக்கி (மாலை 5 மணி), பராகுவே-மாலி (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி நேற்று காலை மும்பை வந்து சேர்ந்தது. அந்தேரியில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. முதல் நாளில் மும்பையில் நடைபெறும் 2 லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 20 ஆயிரம் விற்பனை ஆகி இருக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 10 நாட்கள் இருப்பதால் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மொத்தம் 45,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X