என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூய்மையே சேவை: சாலையை சுத்தம் செய்து குப்பைகள் அள்ளிய சச்சின் டெண்டுல்கர்
Byமாலை மலர்26 Sep 2017 2:47 AM GMT (Updated: 26 Sep 2017 2:47 AM GMT)
தூய்மையே சேவை பிரச்சார திட்டத்தின் கீழ் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தெருக்களை இன்று அதிகாலை சச்சின் டெண்டுல்கர் கூட்டி, சுத்தம் செய்தார்.
மும்பை:
பிரதமர் மோடி பதவியேற்றதும் முதன் முறையாக தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் உள்ள பிரபலங்கள் இத்திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர், சமீபத்தில் மக்கள் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை கூட்டி, சுத்தம் செய்து வருகின்றர்.
அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் மும்பை பந்த்ரா நகரில் உள்ள தெருக்களை இன்று அதிகாலை கூட்டி சுத்தம் செய்தார்.
அவருடன் ஏராளமான பொதுமக்களும் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தனர். “இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க நான் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். அதனால், உங்களது நண்பர்களுடன் ஒன்று சேருங்கள், தெருவையோ வேறு எங்கேயோ சுத்தப்படுத்துங்கள்” என்று சச்சின் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்றதும் முதன் முறையாக தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் உள்ள பிரபலங்கள் இத்திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர், சமீபத்தில் மக்கள் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை கூட்டி, சுத்தம் செய்து வருகின்றர்.
அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் மும்பை பந்த்ரா நகரில் உள்ள தெருக்களை இன்று அதிகாலை கூட்டி சுத்தம் செய்தார்.
அவருடன் ஏராளமான பொதுமக்களும் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தனர். “இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க நான் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். அதனால், உங்களது நண்பர்களுடன் ஒன்று சேருங்கள், தெருவையோ வேறு எங்கேயோ சுத்தப்படுத்துங்கள்” என்று சச்சின் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X