என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸி.க்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி: ஜடேஜா அவுட்; தவானுக்கு இடமில்லை
Byமாலை மலர்25 Sep 2017 12:42 PM GMT (Updated: 25 Sep 2017 12:42 PM GMT)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். தவான் சேர்க்கப்படவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
காயத்தால் அக்சார் முதல் மூன்று போட்டிகளில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது காயம் குணமடைந்ததால் ஜடேஜா நீக்கப்பட்டு அக்சார் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் ஜடேஜா இடம்பிடித்திருந்தாலும், ஆடும் லெவனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவிக்கு ஆபரேசன் நடைபெற்றதால் தவான் முதல் மூன்று போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினார். ரகானே இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார். இதனால் தவான் மீண்டும் அணியில் சேர்க்கப்படவில்லை.
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா 3. கே.எல். ராகுல், 4. மணீஷ் பாண்டே, 5. கேதர் ஜாதவ், 6. ரகானே, 7. எம்.எஸ். டோனி, 8. ஹர்திக் பாண்டியா, 9. குல்தீப் யாதவ், 10. சாஹல், 11. பும்ரா, 12. புவனேஸ்வர் குமார், 13. உமேஷ் யாதவ், 14. மொகமது ஷமி, 15. அக்சார் பட்டேல்.
முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
காயத்தால் அக்சார் முதல் மூன்று போட்டிகளில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது காயம் குணமடைந்ததால் ஜடேஜா நீக்கப்பட்டு அக்சார் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் ஜடேஜா இடம்பிடித்திருந்தாலும், ஆடும் லெவனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவிக்கு ஆபரேசன் நடைபெற்றதால் தவான் முதல் மூன்று போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினார். ரகானே இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார். இதனால் தவான் மீண்டும் அணியில் சேர்க்கப்படவில்லை.
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா 3. கே.எல். ராகுல், 4. மணீஷ் பாண்டே, 5. கேதர் ஜாதவ், 6. ரகானே, 7. எம்.எஸ். டோனி, 8. ஹர்திக் பாண்டியா, 9. குல்தீப் யாதவ், 10. சாஹல், 11. பும்ரா, 12. புவனேஸ்வர் குமார், 13. உமேஷ் யாதவ், 14. மொகமது ஷமி, 15. அக்சார் பட்டேல்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X