search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்: டோனியை முந்திய ரோகித்சர்மா
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்: டோனியை முந்திய ரோகித்சர்மா

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த டோனியை நேற்று ரோகித்சர்மா 71 ரன்கள் எடுத்ததன் மூலம் முந்தினார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த டோனியை நேற்று ரோகித்சர்மா முந்தினார். 71 ரன் எடுத்ததன் மூலம் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1403 ரன்னை தொட்டார். ரோகித்தின் சராசரி 63.77 ஆகும். டோனி 1342 ரன் எடுத்து உள்ளார். தெண்டுல்கர் 3077 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×