என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய ஆக்கி அணி வலுவானது இல்லை: பாகிஸ்தான் பயிற்சியாளர்
Byமாலை மலர்22 Sep 2017 3:41 AM GMT (Updated: 22 Sep 2017 3:41 AM GMT)
இந்திய ஆக்கி அணி வலுவானது இல்லை என பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பர்கத் கான் கூறியுள்ளார்.
டாக்கா:
8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியா, சீனா, ஓமன் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பர்கத் கான் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடர் கடினமானதாக இருக்கும். இந்திய அணி வலுவானது என்று சொல்ல முடியாது. உலக தரவரிசையில் இந்திய அணி 6-வது இடத்தில் இருந்தாலும் அது காகித அளவில் தான் வலுவானது. சமீபகாலங்களில் எங்கள் அணி கடினமான நிலையை சந்தித்து வருகிறது.
கடந்த உலக கோப்பை மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நாங்கள் தகுதி பெறவில்லை. எனவே இந்த ஆசிய போட்டியில் இருந்து எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எண்ணுகிறோம். இந்த முறை எங்களது இலக்கை அடைய விரும்புகிறோம். அதற்கு நாங்கள் ஆட்டத்தில் எல்லா துறையிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.
8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியா, சீனா, ஓமன் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பர்கத் கான் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடர் கடினமானதாக இருக்கும். இந்திய அணி வலுவானது என்று சொல்ல முடியாது. உலக தரவரிசையில் இந்திய அணி 6-வது இடத்தில் இருந்தாலும் அது காகித அளவில் தான் வலுவானது. சமீபகாலங்களில் எங்கள் அணி கடினமான நிலையை சந்தித்து வருகிறது.
கடந்த உலக கோப்பை மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நாங்கள் தகுதி பெறவில்லை. எனவே இந்த ஆசிய போட்டியில் இருந்து எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எண்ணுகிறோம். இந்த முறை எங்களது இலக்கை அடைய விரும்புகிறோம். அதற்கு நாங்கள் ஆட்டத்தில் எல்லா துறையிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X