என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொந்த மண்ணில் ரியல் பெடிஸ் அணியிடம் 0-1 என ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி
Byமாலை மலர்21 Sep 2017 1:12 PM GMT (Updated: 21 Sep 2017 1:12 PM GMT)
ரொனால்டோ அணிக்கு திரும்பிய நிலையிலும் லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி சொந்த மண்ணில் ரியல் பெடிஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.
லா லிகா தொடரில் இடம்பிடித்துள்ள முன்னணி அணிகளில் ஒன்று ரியல் மாட்ரிட். கடந்த 2016-17 சீசனில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தது. ஆனால் இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
முதல் நான்கு போட்டிகளில் கிறிஸ்டியானோ ரெனால்டோ தடைக் காரணமாக பங்கேற்கவில்லை. நேற்றைய ஐந்தாவது போட்டியில் ரியல் மாட்ரிட் ரியல் பெடிஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ரொனால்டோ இடம்பிடித்தார். வலுவான ரியல் மாட்ரிட் அணிக்கு ரியல் பெடிஸ் அணி கடும் நெருக்கடி கொடுத்தது.
இரு அணிகளுக்கும் கோல்கள் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. அத்தனை வாய்ப்புகளும் வீண் போனது. இதனால் 90 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றிற்காக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 4-வது நிமிடத்தில், அதாவது 94-வது நிமிடத்தில் ரியல் பெடிஸ் அணியின் அண்டோனியோ சனாப்ரியா கோல் அடிக்க ரியல் பெடிஸ் 1-0 என வெற்றி பெற்றது.
இந்த சீசனில் ரியல் மாட்ரிட் தனது சொந்த மைதானத்தில் இதுவரை வெற்றி பெறாமல் இருக்கிறது. ஐந்து போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. ரியல் மாட்ரிட்டின் பரம எதிரியான பார்சிலோனா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
முதல் நான்கு போட்டிகளில் கிறிஸ்டியானோ ரெனால்டோ தடைக் காரணமாக பங்கேற்கவில்லை. நேற்றைய ஐந்தாவது போட்டியில் ரியல் மாட்ரிட் ரியல் பெடிஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ரொனால்டோ இடம்பிடித்தார். வலுவான ரியல் மாட்ரிட் அணிக்கு ரியல் பெடிஸ் அணி கடும் நெருக்கடி கொடுத்தது.
இரு அணிகளுக்கும் கோல்கள் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. அத்தனை வாய்ப்புகளும் வீண் போனது. இதனால் 90 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றிற்காக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 4-வது நிமிடத்தில், அதாவது 94-வது நிமிடத்தில் ரியல் பெடிஸ் அணியின் அண்டோனியோ சனாப்ரியா கோல் அடிக்க ரியல் பெடிஸ் 1-0 என வெற்றி பெற்றது.
இந்த சீசனில் ரியல் மாட்ரிட் தனது சொந்த மைதானத்தில் இதுவரை வெற்றி பெறாமல் இருக்கிறது. ஐந்து போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. ரியல் மாட்ரிட்டின் பரம எதிரியான பார்சிலோனா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X