என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 44/1; ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்
Byமாலை மலர்21 Sep 2017 8:56 AM GMT (Updated: 21 Sep 2017 8:56 AM GMT)
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. ரோகித் 7 ரன்னில் அவுட் ஆனார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை போட்டிக்கு வழிவிட்டதால் ஆட்டம் சரியாக 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பால்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 5.1 ஓவரில் 19 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
14 பந்தில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, கவுல்டர்-நைல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 7 ரன்னுடனும், ரகானே 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை போட்டிக்கு வழிவிட்டதால் ஆட்டம் சரியாக 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பால்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 5.1 ஓவரில் 19 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
14 பந்தில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, கவுல்டர்-நைல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 7 ரன்னுடனும், ரகானே 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X