search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த், பிரனோய் வெற்றி
    X

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த், பிரனோய் வெற்றி

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியவைச் சேர்ந்த சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரனோய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    டோக்கியோ:

    ரூ.2 கோடி பரிசுத் தொகைக்கான ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கியது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, 19-ம் நிலை வீராங்கனை மினாட்சு மிதானியை (ஜப்பான்) எதிர்கொண்டார். இப்போட்டியில் 12-21, 21-15, 21-17 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். அவர் அடுத்த சுற்றில் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால், 25-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் பொம்பாவீ சோசுவாங்கை சந்தித்தார். இப்போட்டியில் சாய்னா, 21-17, 21-9 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றார். அடுத்த சுற்றில் அவர் ஒலிம்பிக் சாம்பியன் கரோலின் மரினை (ஸ்பெயின்) சந்திக்கிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் - சீனாவின் ஹவுவே தியானை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-15, 12-21, 21-11 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த், சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனோய் - டென்மார்க்கின் அண்டோன்சன் மோதினர். இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரனோய், 21-12, 21-14 என்ற நேர் செட்களில் வென்றார்.

    மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், கொரியாவின் டாங் கியூன் லீயிடம் 23-21, 17-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.


    Next Story
    ×