search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - ஆஸி. தொடர்தான் 5 போட்டிகள் கொண்ட கடைசி தொடர்?
    X

    இந்தியா - ஆஸி. தொடர்தான் 5 போட்டிகள் கொண்ட கடைசி தொடர்?

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையே தற்போது நடைபெறும் தொடர்தான், ஐந்து போட்டிகள் கொண்ட கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஐ.சி.சி தற்போது பல மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. இதில் முக்கியமான ஒன்று 13 அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் லீக். இந்த லீக்கை நடத்துவதற்கு ஐ.சி.சி. அதிக முயற்சி எடுத்து வருகிறது.

    இந்த லீக் நடைபெற்றால் வருங்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது கடினம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தலைவர் சுதர்லேண்டு உறுதிப்படுத்தியுள்ளார்.



    இருந்தாலும் இருநாடுகள் தங்களுக்கு இடையே எத்தனை போட்டிகள் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். வருங்காலத்தில் எந்த நாடும் மூன்று போட்டிகளுக்கு மேல் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடும் என்று நான் பார்க்கவில்லை. டி20 போட்டிகள் என்றால் கூடுதலாக நடத்தப்படலாம்.

    ஒருநாள் கிரிக்கெட் லீக் நடைமுறைக்கு வந்தால், 13 அணிகளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை சொந்த மண்ணிலும், தலா ஒருமுறை வெளிநாட்டு மண்ணிலும் விளையாட வேண்டும். இதனால் ஒருநாள் தொடர் வரைமுறைக்கு வர வாய்ப்புள்ளது’’ என்றார்.
    Next Story
    ×