என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, முதல் மந்திரிகள் வாழ்த்து
Byமாலை மலர்17 Sep 2017 1:30 PM GMT (Updated: 17 Sep 2017 1:30 PM GMT)
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதல் மந்திரிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை
நோஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இறுதியில், 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் நோஜோமி ஒகுஹராவை பி.வி.சிந்து வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடி பதிவிடுகையில், கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துக்கு வாழ்த்துக்கள். வளர்ந்து வரும் வீராங்கனை சிந்துவின் சாதனையை கண்டு நாடு பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, விளையாட்டு துறை மற்றும் நடிகர் அமிதாப்பச்ச்சன் உள்ளிட்ட சினிமா துறையினர் உள்பட பலரும் டுவிட்டரில்
பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை
நோஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இறுதியில், 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் நோஜோமி ஒகுஹராவை பி.வி.சிந்து வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடி பதிவிடுகையில், கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துக்கு வாழ்த்துக்கள். வளர்ந்து வரும் வீராங்கனை சிந்துவின் சாதனையை கண்டு நாடு பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, விளையாட்டு துறை மற்றும் நடிகர் அமிதாப்பச்ச்சன் உள்ளிட்ட சினிமா துறையினர் உள்பட பலரும் டுவிட்டரில்
பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X