என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி
Byமாலை மலர்16 Sep 2017 9:30 PM GMT (Updated: 16 Sep 2017 9:30 PM GMT)
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் வெற்றி பெற்றார். யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் வெற்றி பெற்றார். யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக சுற்றுக்கான ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில் இந்தியா-கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கனடாவில் உள்ள எட்மண்டன் நகரில் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 154-வது இடத்தில் இருக்கும் 22 வயதான ராம்குமார் ராமநாதன், 202-ம் நிலை வீரரான கனடாவின் பிராட்லீ ஸ்னூரை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த ராம்குமார் 5-7, 7-6 (7-4), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிராட்லீ ஸ்னூரை வீழ்த்தி இந்திய அணிக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை கொடுத்தார். இந்த ஆட்டம் 3 மணி 16 நிமிடம் நீடித்தது.
இந்த ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை போட்டியில் ராம்குமார் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. 5 ஆட்டங்களில் விளையாடிய அவர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
2-வது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 157-வது இடத்தில் உள்ள யுகி பாம்ப்ரி, 51-ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷபோவாலோவுடன் மோதினார். முதல் 2 செட்களையும் இழந்த யுகி பாம்ப்ரி, பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் 5-வது செட் வரை நீடித்தது. கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஷபோவாலோவ் வெற்றி பெற்றார். முடிவில் யுகி பாம்ப்ரி 6-7 (2-7), 4-6, 7-6 (8-6), 6-4, 1-6 என்ற செட் கணக்கில் ஷபோவாலோவ்விடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 52 நிமிடம் நீடித்தது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக சுற்றுக்கான ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில் இந்தியா-கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கனடாவில் உள்ள எட்மண்டன் நகரில் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 154-வது இடத்தில் இருக்கும் 22 வயதான ராம்குமார் ராமநாதன், 202-ம் நிலை வீரரான கனடாவின் பிராட்லீ ஸ்னூரை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த ராம்குமார் 5-7, 7-6 (7-4), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிராட்லீ ஸ்னூரை வீழ்த்தி இந்திய அணிக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை கொடுத்தார். இந்த ஆட்டம் 3 மணி 16 நிமிடம் நீடித்தது.
இந்த ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை போட்டியில் ராம்குமார் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. 5 ஆட்டங்களில் விளையாடிய அவர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
2-வது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 157-வது இடத்தில் உள்ள யுகி பாம்ப்ரி, 51-ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷபோவாலோவுடன் மோதினார். முதல் 2 செட்களையும் இழந்த யுகி பாம்ப்ரி, பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் 5-வது செட் வரை நீடித்தது. கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஷபோவாலோவ் வெற்றி பெற்றார். முடிவில் யுகி பாம்ப்ரி 6-7 (2-7), 4-6, 7-6 (8-6), 6-4, 1-6 என்ற செட் கணக்கில் ஷபோவாலோவ்விடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 52 நிமிடம் நீடித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X