search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, சமீர் வர்மா காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, சமீர் வர்மா காலிறுதிக்கு முன்னேற்றம்

    கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். காஷ்யப் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.
    சியோல்:

    தென்கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சமீர் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் தாய்லாந்தின் நிட்சயோன் ஜிந்தாபோலை 20-20, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சமீர் வர்மா இரண்டாவது சுற்றில் ஹாங்காங் வீரர் விங் கி வின்சென்டை 21-19, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இப்போட்டியில் வெற்றி பெற சமீருக்கு 41 நிமிடங்கள் ஆனது.  

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார். காஷ்யப்பை 1 மணி நேரம் 16 நிமிட போராட்டத்திற்கு பின் சன் வான் 21-16, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    Next Story
    ×