என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு: ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும்
Byமாலை மலர்13 Sep 2017 8:40 AM GMT (Updated: 13 Sep 2017 8:40 AM GMT)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்தியா தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும்.
சென்னை:
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.
வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலே இந்தியா முதல் இடத்தை பிடித்துவிடும். 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் போது 120 புள்ளிகளை பெறும். 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால் 122 புள்ளிகளை பெறும். இந்த தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றால் 118 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேற முடியும்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலோ 4-1 என்ற கணக்கிலோ இந்தியாவை வீழ்த்தினால் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும்.
ஸ்டீபன்சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.
வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலே இந்தியா முதல் இடத்தை பிடித்துவிடும். 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் போது 120 புள்ளிகளை பெறும். 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால் 122 புள்ளிகளை பெறும். இந்த தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றால் 118 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேற முடியும்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலோ 4-1 என்ற கணக்கிலோ இந்தியாவை வீழ்த்தினால் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும்.
ஸ்டீபன்சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X