search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு: ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும்
    X

    இந்தியா முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு: ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்தியா தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும்.
    சென்னை:

    ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.

    வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலே இந்தியா முதல் இடத்தை பிடித்துவிடும். 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் போது 120 புள்ளிகளை பெறும். 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால் 122 புள்ளிகளை பெறும். இந்த தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றால் 118 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேற முடியும்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலோ 4-1 என்ற கணக்கிலோ இந்தியாவை வீழ்த்தினால் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும்.

    ஸ்டீபன்சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
    Next Story
    ×