என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி 2017: லீக் போட்டிகளில் பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி
Byமாலை மலர்12 Sep 2017 7:50 PM GMT (Updated: 12 Sep 2017 7:50 PM GMT)
புரோ கபடி தொடரின் லீக் போட்டிகளில் பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
சண்டிகர்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 6வது கட்டமாக லீக் போட்டிகள் அரியானா மாநிலத்தின் சோனெபத் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று (12-ம் தேதி) நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், அரியானா அணி 27-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. அரியானா அணியின் வசீர் சிங் அதிகபட்சமாக 9 தொடுபுள்ளிகள் எடுத்தார். இப்போட்டியில் வென்ற அரியானா அணி 46 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தோல்வியடைந்த டெல்லி அணி 28 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
‘பீ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. விறுவிருப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெங்கால் அணி 32-31 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்கால் அணி 50 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இன்று ( 13-ம் தேதி ), நடைபெறும் லீக் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் - உ.பி. யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 6வது கட்டமாக லீக் போட்டிகள் அரியானா மாநிலத்தின் சோனெபத் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று (12-ம் தேதி) நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், அரியானா அணி 27-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. அரியானா அணியின் வசீர் சிங் அதிகபட்சமாக 9 தொடுபுள்ளிகள் எடுத்தார். இப்போட்டியில் வென்ற அரியானா அணி 46 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தோல்வியடைந்த டெல்லி அணி 28 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
‘பீ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. விறுவிருப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெங்கால் அணி 32-31 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்கால் அணி 50 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இன்று ( 13-ம் தேதி ), நடைபெறும் லீக் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் - உ.பி. யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X