என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல்., டி20 உலகக்கோப்பை அனுபவம் எங்களுக்கு சாதகமாக இருக்கும்: பால்க்னெர்
Byமாலை மலர்11 Sep 2017 3:57 PM GMT (Updated: 11 Sep 2017 3:57 PM GMT)
ஐ.பி.எல். டி20 லீக் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடர் அனுபவம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என பால்க்னெர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 17-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இரண்டு அணிகளும் வலுவானது என்பதால் யார் தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். மற்றும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என ஜேம்ஸ் பால்க்னெர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் பால்க்னெர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் ஐ.பி.எல். டி20 லீக் மற்றும் டி20 உலகக்கோப்பையில் விளையாடியவர்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய அணி சமீப காலமாக ஏராளமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. தற்போது அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவை வெற்றிக் கொள்வதற்கான சோதனையாக இருக்கும்’’ என்றார்.
சிறந்த ஆல்ரவுண்டரான பால்க்னெர் சமீப காலமாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
இரண்டு அணிகளும் வலுவானது என்பதால் யார் தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். மற்றும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என ஜேம்ஸ் பால்க்னெர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் பால்க்னெர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் ஐ.பி.எல். டி20 லீக் மற்றும் டி20 உலகக்கோப்பையில் விளையாடியவர்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய அணி சமீப காலமாக ஏராளமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. தற்போது அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவை வெற்றிக் கொள்வதற்கான சோதனையாக இருக்கும்’’ என்றார்.
சிறந்த ஆல்ரவுண்டரான பால்க்னெர் சமீப காலமாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X