search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி 2017: சொந்த மைதானத்தில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ்
    X

    புரோ கபடி 2017: சொந்த மைதானத்தில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ்

    புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி, பெங்கால் வாரியர்ஸ் அணி ‘பீ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    கொல்கத்தா:

    புரோ கபடி லீக் 2017 போட்டிகள் பல கட்டங்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 6-வது கட்ட போட்டிகள் மேற்குவங்கம் மாநில தலைநகரான கொல்கத்தாவில் இன்று (1-ம் தேதி) தொடங்கியது.

    முதல் நாள் லீக் போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில், பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் பாதியில் பாட்னா அணி 18-14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. 

    அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்கால் அணி, இரண்டாம் பாதியில் 20 புள்ளிகளை விட்டுக்கொடுத்து 27 புள்ளிகள் பெற்றது. இதன்மூலம், பெங்கால் வாரியர்ஸ் அணி 41-38 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    பெங்கால் அணியின் மணிந்தர் சிங் அதிகபட்சமாக 13 தொடுபுள்ளிகள் எடுத்தார். பாட்னா அணித்தரப்பில் கேப்டன் பிரதீப் நர்வால் 11 தொடுபுள்ளிகள் எடுத்தார்.

    இப்போட்டியில் வெற்றி பெற்ற பெங்கால் அணி ‘பீ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் 32 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. பாட்னா அணி 28 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
    Next Story
    ×