search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி 2017: சொந்த மைதானத்தில் 2-வது வெற்றி பெற்றது மும்பை அணி, தமிழ் தலைவாஸ் அணிக்கு 5-வது தோல்வி
    X

    புரோ கபடி 2017: சொந்த மைதானத்தில் 2-வது வெற்றி பெற்றது மும்பை அணி, தமிழ் தலைவாஸ் அணிக்கு 5-வது தோல்வி

    புரோ கபடி 2017 லீக் போட்டிகளில் யூ மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் தலைவாஸ் அணி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

    மும்பை:

    5-வது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 5-வது கட்ட ஆட்டங்கள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் ‘ஏ’ பிரிவில் உள்ள யூ மும்பா அணியும், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியும் மோதின. யூ மும்பா அணி சொந்த மைதானத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கியது.

    இப்போட்டியில், மும்பை அணி 36-32 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை அணித் தரப்பில் காஷிலிங் ஆட்கே 10 தொடுபுள்ளிகள் எடுத்தார். ஜெய்ப்பூர் அணியில் பவன்குமார் 10 புள்ளிகள் எடுத்தார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற யூ மும்பா அணி 29 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஜெய்ப்பூர் அணி 23 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

    முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் ‘பீ’ பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரிச்சை செய்தன. தமிழ் தலைவாஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கியது.

    இப்போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 33-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் நிலேஷ் சலுன்கே ஐந்து புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியின் அஜய் தாகூர் ஏழு புள்ளிகளும் எடுத்தனர்.

    இந்த போட்டியில் வென்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி 23 புள்ளிகளுடன் ‘பீ’ பிரிவில் ஐந்தாவது இடத்திலும், தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் அணி 15 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்திலும் நீடிக்கின்றன.
    Next Story
    ×