search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டார்ட்மண்ட் வீரர் ஓஸ்மான் டெம்பெல்லிற்கு 150 மில்லின் யூரோ கொடுக்க தயாராகும் பார்சிலோனா
    X

    டார்ட்மண்ட் வீரர் ஓஸ்மான் டெம்பெல்லிற்கு 150 மில்லின் யூரோ கொடுக்க தயாராகும் பார்சிலோனா

    ஜெர்மனி கால்பந்து கிளப் அணியான பொருசியா டார்ட்மண்டில் விளையாடும் ஓஸ்மான் டெம்பெல்லை 150 மில்லியன் யூரோவிற்கு வாங்க பார்சிலோனா விருப்பம் தெரிவித்துள்ளது.
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியாக விளங்கி வருவது பார்சிலோனா. இந்த அணியில் பிரேசில் நாட்டின் முன்னணி வீரரான பிரேசில் நாட்டின் நெய்மர் இடம்பிடித்திருந்தார். இவர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்குச் செல்ல விரும்பினார். பார்சிலோனா அணிக்கு விருப்பம் இல்லையெனிலும், 220 மில்லியன் யூரோவிற்கு பார்சிலோனா நெய்மரை கொடுத்தது.

    நெய்மருக்குப் பதிலாக சிறந்த வீரரை பார்சிலோனா தேடிவருகிறது. லிவர்பூல் அணியில் விளையாடி வரும் கவுன்டினோவை பார்சிலோனா வாங்க விருப்பம் தெரிவித்தது. கவுன்டினோவும் பார்சிலோனா வர விரும்பினார். ஆனால் லிவர்பூல் கிளப் அவரை கொடுக்க மறுத்துவிட்டது.



    தற்போது ஜெர்மனி கால்பந்து கிளப் அணியான பொருசியா டார்ட்மண்ட் அணியில் விளையாடும் ஓஸ்மான் டெம்பெல் என்ற வீரரை வாங்க பார்சிலோனா விரும்புகிறது. ஏற்கனவே, 100 மில்லியன் யூரோ கொடுக்க பார்சிலோனா விரும்பியது. இதை டார்ட்மண்ட் நிராகரித்தது.

    தற்போது 150 மில்லியன் யூரோ வரை கொடுக்க பார்சிலோனா முன்வந்துள்ளது. இதனால் டார்ட்மண்ட் டெல்பெல்லை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், டார்ட்மண்ட் அணி தலைமை நிர்வாகி இந்த செய்தியை மறுத்துள்ளார்.
    Next Story
    ×