search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பீல்டிங் தேர்வு- அணியில் மாற்றம் இல்லை
    X

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பீல்டிங் தேர்வு- அணியில் மாற்றம் இல்லை

    இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. அணியில் மாற்றம் ஏதுமில்லை.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அணியில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.



    இலங்கை அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திசாரா, வனிது, சண்டகன் ஆகியோர் நீக்கப்பட்டு துஷ்மந்தா, அகிலா தனஞ்ஜெயா மற்றும் மிலிந்தா ஸ்ரீவர்தனா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×