search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் முன்னேற்றம்
    X

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் முன்னேற்றம்

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப்பெற்றனர்.


    கிளாஸ்கோ:

    23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இன்று இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் சாய் பிரனீத், இந்தோனேசியாவின் ஆண்டனி சினிசுகா கிட்டிங்கை எதிர்கொண்டார். 

    இப்போட்டியின் முதல் சுற்றை 21-14 என கிட்டிங் கைப்பற்றினார். அதன்பின்னர் சிறப்பாக விளையாடிய சாய் பிரனீத் அடுத்த இரண்டு சுற்றுகளையும் 21-18, 21-19 என வென்றார். இதன்மூலம், இப்போட்டியில் வெற்றிபெற்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.



    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்ஸின் லூகாஸ் கூர்வேவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 21-9, 21-17 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.



    மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஏற்கனவே தகுதிப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×