என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி
Byமாலை மலர்22 Aug 2017 4:19 AM GMT (Updated: 22 Aug 2017 4:19 AM GMT)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
கிளாஸ்கோ:
23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. 27-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 21 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-12 என்ற நேர்செட்டில் ரஷியாவின் செர்ஜி சிரான்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்துக்கு 29 நிமிடமே தேவைப்பட்டது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் உலக போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து களம் காணுகிறார். இந்த போட்டி குறித்து பி.வி.சிந்து அளித்த பேட்டியில், ‘நான் நிச்சயம் பதக்கம் வெல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறேன். இந்த முறை வெண்கலத்தை விட சிறந்த பதக்கம் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக களத்தில் கடுமையாக போராடுவேன்’ என்று தெரிவித்தார்.
23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. 27-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 21 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-12 என்ற நேர்செட்டில் ரஷியாவின் செர்ஜி சிரான்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்துக்கு 29 நிமிடமே தேவைப்பட்டது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் உலக போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து களம் காணுகிறார். இந்த போட்டி குறித்து பி.வி.சிந்து அளித்த பேட்டியில், ‘நான் நிச்சயம் பதக்கம் வெல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறேன். இந்த முறை வெண்கலத்தை விட சிறந்த பதக்கம் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக களத்தில் கடுமையாக போராடுவேன்’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X