என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
71 பந்துகளில் சதம்: தவானுக்கு வீராட் கோலி பாராட்டு
Byமாலை மலர்21 Aug 2017 7:27 AM GMT (Updated: 21 Aug 2017 7:27 AM GMT)
71 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த தவானுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தமுல்லா:
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமுல்லாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை 43.2 ஓவரில் 216 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் டிக்வெலா அதிகபட்சமாக 74 பந்தில் 64 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டும், பும்ரா, யசுவேந்தரா சஹால், கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இந்தியா 28.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் தவான் 90 பந்தில் 132 ரன்னும் (20 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் வீராட் கோலி 70 பந்தில் 82 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
தவான் 71 பந்தில் சதம் அடித்து அதிரடி முத்திரை பதித்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிவேக சதம் இதுவாகும்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3 மாதமாக தவான் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறார். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கடைசி வரை களத்தில் நிற்பது முக்கியமானது. அந்த பணியை தான் தவான் செய்தார்.
ஆல்ரவுண்டர் என்ற முறையில் அக்ஷர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.அவரது பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது.
2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணியில் ஏராளமான மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்னும் 24 மாதங்கள் இருந்தாலும் முன்னதாக அணியை தயார்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சோதனை முறையில் மாற்றங்களை செய்து பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமுல்லாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை 43.2 ஓவரில் 216 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் டிக்வெலா அதிகபட்சமாக 74 பந்தில் 64 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டும், பும்ரா, யசுவேந்தரா சஹால், கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இந்தியா 28.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் தவான் 90 பந்தில் 132 ரன்னும் (20 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் வீராட் கோலி 70 பந்தில் 82 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
தவான் 71 பந்தில் சதம் அடித்து அதிரடி முத்திரை பதித்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிவேக சதம் இதுவாகும்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3 மாதமாக தவான் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறார். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கடைசி வரை களத்தில் நிற்பது முக்கியமானது. அந்த பணியை தான் தவான் செய்தார்.
ஆல்ரவுண்டர் என்ற முறையில் அக்ஷர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.அவரது பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது.
2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணியில் ஏராளமான மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்னும் 24 மாதங்கள் இருந்தாலும் முன்னதாக அணியை தயார்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சோதனை முறையில் மாற்றங்களை செய்து பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X