என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
Byமாலை மலர்20 Aug 2017 11:22 PM GMT (Updated: 20 Aug 2017 11:22 PM GMT)
பல்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் சௌமியஜித் கோஷ் - சத்யன் ஜோடி தோல்வியடைந்தனர்.
சோபியா:
பல்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் போட்டிகள் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்போட்டிகள் நேற்று (20-ம் தேதி) நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் சௌமியஜித் கோஷ் - சத்யன் ஜோடி, ஜப்பானின் யூடா ஜின் - யோஷிமுரா மகரு ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டி, சௌமியஜித் கோஷ் - சத்யன் ஜோடியாக விளையாடும் முதல் இறுதிசுற்றாகும்.
இப்போட்டியில், ஜப்பான் ஜோடி 11-13, 11-7, 11-4, 6-11, 11-5 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது. இது ஜப்பான் ஜோடியின் இரண்டாவது உலக தர சாம்பியன் பட்டமாகும். இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணியின் முதல் உலகதர பட்டம் வெல்லும் கனவு தள்ளிப்போய் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X