search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி 2017: புனேரி பால்டன், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி
    X

    புரோ கபடி 2017: புனேரி பால்டன், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி

    புரோ கபடி போட்டியில் இன்று நடந்த லீக் சுற்று ஆட்டங்களில் புனேரி பால்டன், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

    லக்னோ:

    5-வது புரோ கபடி 'லீக்' போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காம் கட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் 18-ம் தேதி தொடங்கியது. 

    இன்று (20-ம் தேதி) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியும் புனேரி பால்டன் அணியும் மோதின. இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 47-42 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. பாட்னா பைரேட்ஸ் அணியின் பிரதீப் நர்வால் அதிகபட்சமாக 19 புள்ளிகள் எடுத்தார். புனே அணியின் ராஜேஷ் மொண்டால் 10 புள்ளிகள் எடுத்தார்.

    இப்போட்டியில், வெற்றி பெற்ற புனேரி பால்டன் அணி 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் 21 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாட்னா அணி 19 புள்ளிகளுடன் ’பி' பிரிவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    அதன்பின் நடைபெற்ற மற்றொரு போட்டியில் உ.பி. யோத்தா - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்  ஜெய்ப்பூர் அணி 24-22 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. 

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் அணி 17 புள்ளிகளிடன் 'ஏ' பிரிவில் நான்காம் இடத்தில் உள்ளது. உ.பி. அணி 21 புள்ளிகளுடன் 'பீ' பிரிவில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

    நாளை ஓய்வுநாள், எனவே போட்டிகள் ஏதும் நடத்தப்படாது. அடுத்து, 22-ம் தேதி நடைபெறும் போட்டிகளில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் - புனேரி பால்டன் அணிகளும், உ.பி. யோத்தா - பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் மோத உள்ளன.

    Next Story
    ×